‘உணவுக் குழாயில் சிக்கிய சிக்கன்’.. தூங்கிக் கொண்டிருந்த தொட்டிலிலேயே உயிரிழந்த குழந்தை !

 

‘உணவுக் குழாயில் சிக்கிய சிக்கன்’.. தூங்கிக் கொண்டிருந்த தொட்டிலிலேயே உயிரிழந்த குழந்தை !

காலை வெகு நேரம் ஆகியும் குழந்தை கண் விழிக்காததால் மீனாட்சி தொட்டிலில் பார்த்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள உம்மியம்பட்டி கிராமத்தில் சின்னதுரை- மீனாட்சி தம்பதி வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். லாரி டிரைவராக வேலை பார்த்து வரும் சின்னதுரை வழக்கம் போல வேலையை முடித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது, குழந்தைகள் உட்பட அனைவரும் இரவு உணவு சாப்பிட்டு விட்டு உறங்கியுள்ளனர். அவரது 2 வயது குழந்தையைத் தொட்டிலில் தூங்க வைத்துள்ளனர். 

ttn

காலை வெகு நேரம் ஆகியும் குழந்தை கண் விழிக்காததால் மீனாட்சி தொட்டிலில் பார்த்துள்ளார். அங்குக் குழந்தை அசைவில்லாமல் கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்குக் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். 

ttn

அதன் பின்னர், குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் உணவுக் குழாயில் சிக்கன் சிக்கியதால் குழந்தை உயிரிழந்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த அப்பகுதி காவல்துறையினர் குழந்தையின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், அன்று இரவு சிக்கன் சாப்பிட்டதாகவும், குழந்தைக்கும் அதனை ஊட்டி விட்டதாகவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.