உணவில் புழு: முருகன் இட்லி கடைக்கு சீல்!

 

உணவில் புழு: முருகன் இட்லி கடைக்கு சீல்!

முருகன் இட்லி கடை, உணவுக் கூடம் சரிவர பராமரிக்கப் படாததும், சமைக்கும் உணவுகளில் புழுக்கள் இருப்பதும் சோதனையில் உறுதி செய்யப்பட்டது. 

கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வழக்கறிஞர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் , அம்பத்தூரில் உள்ள முருகன் இட்லிக் கடையின் உணவுக் கூடத்தை சோதனையிட்டனர். அதில், உணவுக் கூடம் சரிவர பராமரிக்கப் படாததும், சமைக்கும் உணவுகளில் புழுக்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து, முருகன் இட்லி கடையின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதுமின்றி, முருகன் இட்லி கடையின் 23 கிளைகளுக்கும் உணவு தயாரிக்கும் உணவுக்கு கூடத்துக்கு உணவு பாதுகாப்புத் துறை சீல் வைத்தது.