உணவகத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்த கும்பல்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

 

உணவகத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்த கும்பல்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பட்டப்பகலில் உணவகம்  ஒன்றில் புகுந்த கும்பல் ஒன்று ஒருவரை சரமாரியாக வெட்டும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. 

உணவகத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்த கும்பல்! பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் பட்டப்பகலில் உணவகம்  ஒன்றில் புகுந்த கும்பல் ஒன்று ஒருவரை சரமாரியாக வெட்டும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன. 

திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்தில் உள்ள நீதிமன்றம் அருகில் 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று அரிவாளுடன் ஒருவரை துரத்திக் கொண்டு வந்தது. உயிருக்குப் பயந்து ஓடிவந்த அந்த நபர், அங்குள்ள குமரன் உணவகத்துக்குள் தஞ்சம் அடைந்தார். அந்த கும்பலும் உணவகத்துக்குள் புகுந்தது. இதையடுத்து அங்கு மறைந்திருந்த அந்த நபரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதனை உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த காட்சிகள் உணவகத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. 

தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்த அந்த நபரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். கொலை செய்யப்பட்ட அந்த இளைஞர் யார், எதற்காக கொல்லப்பட்டார், கொலை செய்தவர்கள் யார் என்பன குறித்து திருத்தணி காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.