உடை மாற்றும் அறைக்குள் பாலியல் தொல்லை: புகார் கூறிய சிறுமி, தற்கொலை செய்து கொண்ட பயிற்சியாளர்!

 

உடை மாற்றும் அறைக்குள் பாலியல் தொல்லை: புகார் கூறிய சிறுமி, தற்கொலை செய்து கொண்ட பயிற்சியாளர்!

13 வயது சிறுமி பாலியல் புகார் கூறியதால், அவமானம் தாங்காமல் கபடி பயிற்சியாளர் ஒருவர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர்: 13 வயது சிறுமி பாலியல் புகார் கூறியதால், அவமானம் தாங்காமல் கபடி பயிற்சியாளர் ஒருவர் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களுரில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் பயிற்சி மையத்தில் பயிற்சியாளராக இருப்பவர் ருத்ரப்பா ஹோசாமணி. 59வயதான இவர் மீது கடந்த வாரம் 13வயது சிறுமி  உடைமாற்றும் அறைக்குள் வந்து ருத்ரப்பா பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் திரண்டு வந்து ருத்ரப்பாவை தாக்கினர். இது தொடர்பாக சிறுமி சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதனால், அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு தற்போது விசாரணையில் உள்ளார். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று அறை எடுத்துத் தங்கிய அவர், கடிதம் எழுதி வைத்து விட்டு,  தூக்கிட்டு  தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அதில், ‘தற்கொலை செய்வதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நான் இப்போது எந்த நிலையிலும் உதவியில்லாமல் உள்ளேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது மனைவியை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என மகனிடம் கேட்டுள்ள ருத்ரப்பா, தனது உடலை தானம் செய்யவும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.