உடல் முழுவதும் சிகரெட் சூடு…தோட்டத்தில் பிணமாக தொங்கிய கர்ப்பிணி!

 

உடல் முழுவதும் சிகரெட் சூடு…தோட்டத்தில் பிணமாக தொங்கிய கர்ப்பிணி!

ரோஜா கர்ப்பமானதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறவே ராஜேஷ்   ரோஜாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். 

காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த ஆண்டி சிறுவள்ளூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஜா. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த இவர், காரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்  என்பவரை காதலித்துள்ளார். இதையடுத்து ரோஜா கர்ப்பமானதால் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறவே ராஜேஷ்   ரோஜாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார். 

pregnant

இந்நிலையில், காஞ்சிபுரத்தை அடுத்த பரந்தூர் கிராமத்தில்  உள்ள தோட்டத்தில் ரோஜா மரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக  தொங்கியுள்ளார். இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரோஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது ரோஜாவின் உடலில் சிகரெட் சூடுகள்  வைக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. 

ttn

இதையடுத்து ரோஜாவின் குடும்பத்தினரும் உறவினர்களும் ராஜேஷ் மற்றும் இதில் தொடர்புடையவர்களை உடனடியாகக் கைது செய்து வேண்டும் எனக் கூறி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராஜேஷ் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.  இதனால் ரோஜாவை காதலித்து ஏமாற்றி கொலை செய்துவிட்டார் என்று கூறினர். 

roja

இதை தொடர்ந்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸார்,  தற்கொலை வழக்கை கொலை வழக்காகப் பதிவு செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் ராஜேஷைக் கைது செய்தது  குறிப்பிடத்தக்கது.