உடல் சுகத்துக்காக ஒரு மணி நேர திருமணம்… இளம்பெண்களை சீரழிக்கும் மத குருமார்கள்..!

 

உடல் சுகத்துக்காக ஒரு மணி நேர திருமணம்… இளம்பெண்களை சீரழிக்கும் மத குருமார்கள்..!

சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உடல் சுகத்துக்காக தற்காலிகமாக திருமணம் செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது.

 ஈராக் நாடு தீவிராவதத்தால் சீரழிந்து வரும் நிலையில் இன்னொரு அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளது பிபிசி செய்தி நிறுவனத்தின் செய்தி அறிக்கை.

அந்நாட்டில் சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்கள், தொழிலதிபர்கள் உடல் சுகத்துக்காக தற்காலிகமாக திருமணம் செய்து கொள்வதாக தெரியவந்துள்ளது. சில திருமணங்களின் ஆயுட்காலம் வெறும் 1 மணி நேரம் கூட இருக்கலாம் என்று சொல்கின்றனர். ஒப்பந்த முறையில் தொழில் செய்வதை போல, இங்கே ஒப்பந்த முறையில் திருமணங்கள் நடக்கிறது.

இதற்கு இஸ்லாம் மத குருக்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி துணை போவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனால் பல பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். இது குறித்து ஆங்கில ஊடகமான பிபிசி களத்துக்கே சென்று திரட்டிய தகவல்களை வீடியோ வடிவில் வெளியிட்டுள்ளது.