உடல் ஆரோக்கியத்துக்கு மூலிகை காபி!!

 

உடல் ஆரோக்கியத்துக்கு மூலிகை காபி!!

அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அது அளவுக்கு மீறினால் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதும் தெரியும்.

அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அது அளவுக்கு மீறினால் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதும் தெரியும். இருப்பினும், அப்பழக்கத்தை விட முடியாமல் அவர்கள் தவித்து வருவர். அப்படி தவிப்பவர்களா நீங்கள்? ஆப்படியெனில் மூலிகை காபி செய்து குடிப்பதை கற்றுக் கொள்ளுங்கள்!!

 

தேவையான பொருட்கள்:

ஏலரிசி (முதிர்ந்த ஏலக்காய்களின் உள்ளிருக்கும் விதைகள்) – 25 கிராம், வால்மிளகு – 50 கிராம், சீரகம் – 100 கிராம், மிளகு – 200 கிராம்.

செய்முறை:

மேற்கண்டவற்றை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும்.

cardamom

நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500 மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும், மேலே கூறிய பொடியில் 2 டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து, இதனுடன் 200 மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.

காபி ருசி மாறாமல் இனிமையாக இது இருக்கும். இதனால் நோய்கள் பயமே இல்லாமல் இருக்கலாம். மேலும், பல விதமான நோய்களும் இந்த காபிக்கு கட்டுப்படுகின்றன.

pepper

இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது. மாதவிடாய் கோளாறுகள் சீராகும். வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும். குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள்.