உடல்நலக்குறைவு காரணமாக ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி! 

 

உடல்நலக்குறைவு காரணமாக ப.சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதி! 

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. சி.பி.ஐ. காவல் முடிந்த பிறகு நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார்.  இதற்கிடையே ஐ.என்.எக்ஸ். மீடியா சட்டவிரோத வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரிக்க அமலாக்கத்துறை தீவிரம் காட்டி வந்தது.

chidambaram

ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து அமலாக்கபிரிவினர் தற்போது அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது ப. சிதம்பரம் உடல் நிலை சரியில்லாமல் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வயிற்று வலி பிரச்னை காரணமாக இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிதம்பரம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. ப. சிதம்பரத்திற்கு ஏற்கனவே உடல்நலை சரியில்லாத காரணத்தால் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தார்.