உடல்நலக்குறைவால் அருண்ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி! 

 

உடல்நலக்குறைவால் அருண்ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி! 

உடல்நலக்குறைவு காரணமாக முன்னாள் நிதி அமைச்சர் அருண்ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் முன்னாள் நிதியமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த சில நாட்களாக சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைக்காக அவர் சிகிச்சை எடுத்துவருகிறார். மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இரண்டு முறை சிகிச்சைக்காக வெளிநாடு சென்றபோது அவரின் நிதியமைச்சர் பொறுப்பு, மத்திய அமைச்சர் பியூஸ் கோயிலுக்கு ஒதுக்கப்பட்டது.

சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அருண் ஜேட்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.