உடன் பணியாற்றும் நண்பரின் மகளை கர்ப்பமாக்கிய ஆசாமி கைது: அதிர்ச்சி சம்பவம்

 

உடன் பணியாற்றும் நண்பரின் மகளை கர்ப்பமாக்கிய ஆசாமி கைது: அதிர்ச்சி சம்பவம்

திருவையாறு அருகே உடன் பணியாற்றும் நண்பரின் மகளை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சாவூர்: திருவையாறு அருகே உடன் பணியாற்றும் நண்பரின் மகளை வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள பவனமங்கலம் கிராமத்திலுள்ள ஒரு செங்கல் சூளையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் கௌதமன். இவரோடு பணியாற்றி வந்த நண்பரின் 16 வயது மகளும், இவரின் மகளும் ஒரே வகுப்பில் படித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அந்தச் சிறுமிக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த சிறுமியை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை, திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பின், சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியை கௌதமன் பாலியல் பலாத்காரம் செய்ததோடு, வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக மிரட்டியது தெரியவந்தது.

இதனையடுத்து, கெளதமனை போக்சோ மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.