உச்சத்தை அடையும் கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 39 லட்சத்தை நெருங்குகிறது!
இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் வரும் மே 17 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 38 லட்சத்து 45ஆயிரத்து 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 2லட்சத்து 69 ஆயிரத்து 564 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 12 லட்சத்து 82 ஆயிரத்து 930 பேர் குணமாகியுள்ளனர்.