உசேன் போல்ட்டை விட வேகமாக ஓடிய கம்பாளா வீரர் போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு – கிரண் ரிஜிஜூ
உசேன் போல்ட்டை காட்டிலும் வேகமாக ஓடிய கம்பாளா வீரர், போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
டெல்லி: உசேன் போல்ட்டை காட்டிலும் வேகமாக ஓடிய கம்பாளா வீரர், போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் புகழ்பெற்ற பாரம்பரிய விளையாட்டு கம்பாளா. அதாவது வேகமாக ஓடும் எருமை மாடுகளுடன், அதனை இயக்கும் பயிற்சி வீரர் ஒருவர் கூடவே ஓடுவார். இந்தப் போட்டியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் மங்களூருவின் மிஜர் அஸ்வத்பூர் பகுதியைச் சேர்ந்த சீனிவாச கவுடா தொடர்ந்து கலந்து கொண்டு வருகிறார். கடந்த 1-ஆம் தேதி நடைபெற்ற கம்பாளா போட்டியில் 142.5 மீட்டர் தூரத்தை வெறும் 13.62 வினாடிகளில் கடந்தார். அதேசமயம் 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்தார்.
Yes @PMuralidharRao ji. Officials from SAI have contacted him. His rail ticket is done and he will reach SAI centre on monday. I will ensure top national coaches to conduct his trials properly. We are team @narendramodi ji and will do everything to identity sporting talents! https://t.co/RF7KMfIHAD
— Kiren Rijiju (@KirenRijiju) February 15, 2020
2017-ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்தார். இதுவே இதுவரை உலக சாதனையாக இருந்து வருகிறது. ஆனால் கம்பாளா வீரர் சீனிவாச கவுடா 9.55 விநாடிகளில் 100 மீட்டர் தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில், கம்பாளா வீரர் சீனிவாச கவுடாவுக்கு போதிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு அவர் போட்டிகளில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.