உசிலம்பட்டியில் மேலும் ஒரு பெண்சிசு கொலை? போலிசார் மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டு

 

உசிலம்பட்டியில் மேலும் ஒரு பெண்சிசு கொலை? போலிசார் மீது மருத்துவர்கள் குற்றச்சாட்டு

கடந்த இரண்டு வாரத்திற்கு உசிலம்பட்டியில் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து ஆண்டிபட்டியிலும் அதே போலப் பெண் சிசுக்கொலை நடந்தது. இந்நிலையில் மீண்டு உசிலம்பட்டியில் தற்போது ஒரு பெண் சிசுக்கொலை நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த இரண்டு வாரத்திற்கு உசிலம்பட்டியில் பிறந்து 30 நாட்களே ஆன குழந்தை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து ஆண்டிபட்டியிலும் அதே போலப் பெண் சிசுக்கொலை நடந்தது. இந்நிலையில் மீண்டு உசிலம்பட்டியில் தற்போது ஒரு பெண் சிசுக்கொலை நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உசிலம்பட்டி அருகே சேடபட்டியைச் சேர்ந்த சூர்யபிரபா – முத்துப்பாண்டி தம்பதிகளுக்கு ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களுக்கு கடந்த பிப் – 6 ஆம் தேதி சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. இந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த வந்த கிராம செவிலியர் மீனாட்சியிடம் பிப் – 15ஆம் தேதி இறந்துவிட்டதாக கூறி மறைமுகமாக வீட்டின் அருகே புதைத்துவிட்டதாகவும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

ttt

இதன் அடிப்படையில் பெண்சிசுவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் கிராம செவிலியர் மீனாட்சி, சேடபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் அளித்து பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் இந்த புகாரின் மீது போலிசார் முறையாக விசாரணை நடத்தாமல் காலதாமதப்படுத்தி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.