‘உங்க வீட்டுல புதையல் இருக்கு’ : ஜோசியர் பேச்சைக் கேட்டு ஏமார்ந்த நபர் !

 

‘உங்க வீட்டுல புதையல் இருக்கு’ : ஜோசியர் பேச்சைக் கேட்டு ஏமார்ந்த நபர் !

இவரும் ஜோசியர் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவரது வீட்டினுள் 20 அடி ஆழத்தில் குழி தோண்டியுள்ளார். ஆனால், புதையல் கிடைக்கவில்லை.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே உள்ள கும்மனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன். இவரது வீட்டில் புதையல் இருப்பதாக ஜோசியர் ஒருவர் கூறியிருக்கிறார். பணம் என்றால் பிணம் கூட வாயைப் பிளக்கும். அதே போல, இவரும் ஜோசியர் பேச்சைக் கேட்டுக் கொண்டு அவரது வீட்டினுள் 20 அடி ஆழத்தில் குழி தோண்டியுள்ளார். ஆனால், புதையல் கிடைக்கவில்லை. அங்கு இருந்தால் தானே கிடைக்கும். ஜோசியர் சொன்னதை நம்பி குழி தோண்டி ஏமாந்து போகியுள்ளார். 

ttn

இவர் குழி தோண்டும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனே வருவாய்த் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். அங்கு விரைந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த குழியை ஏன் தோண்டியுள்ளீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு மோகன், ஜோசியர் ஒருவர் புதையல் இருப்பதாகக் கூறினார். அதற்காகத் தோண்டினேன் என்று பதிலளித்துள்ளார். இதனால் கடுப்பான அதிகாரிகள் குழியை மண்ணைக் கொண்டு மூட வைத்து விட்டு, மறுபடியும் இவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர்.