உங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி!

 

உங்க வீட்டில் பேய் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள இதுதாங்க வழி!

பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடையே நிலவி வரும் சந்தேகம் ஆகும்.

பேய் இருக்கிறதா? இல்லையா? என்பது பல நூற்றாண்டுகளாக மனிதர்களிடையே நிலவி வரும் சந்தேகம் ஆகும். ஏனெனில் நம்மை சுற்றி நடக்கும் பல நிகழ்வுகளும், நமக்கு ஏற்படும் சொந்த அனுபவங்களும் நமக்கு இந்த சந்தேகத்தை எப்போதும் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

கடவுள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட பேயை நினைத்து பயப்படாமல் இருக்கமாட்டார்கள். கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்கள் நிச்சயம் பேயையும் நம்புவார்கள். ஏனென்றால் நல்ல சக்தி இருந்தால், தீயசக்தியும் நிச்சயம் இருக்கும். இப்போது குழப்பமே என்னவென்றால் பேய் எங்கிருக்கும் என்பதுதான். கடவுள் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்று கூறுவார்கள் அதுபோலத்தான் பேயும் எங்கிருக்கும் என்று யாரும் கூற இயலாது. பொதுவாக தீய ஆவிகள் என்றால் பேய் என்றும், நல்ல ஆவிகள் என்றால் ஆத்மாக்கள் என்றும் கூறுவார்கள். அனைத்து ஆவிகளும் நமக்கு தீங்கை ஏற்படுத்துவத்தில்லை.

ghost

பேய்கள் இருப்பதற்கான அறிகுறிகள் படங்களில் கூறுவது போல மல்லிகைப்பூவின் மணம் வருவதோ, சலங்கை ஒலி வருவதோ இல்லை. அமானுஸ்ய ஆராய்ச்சியாளர்கள் பேய் இருப்பதற்கான அறிகுறிகளாக கூறும் அறிகுறிகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் நிழல்கள் இது பேய் படங்களில் அதிகம் காட்டப்படும் ஒன்று.

ghost

நன்கு விளக்குள் எரியும் ஓர் அறையில் நீங்கள் நிலைகளை திடீரென பார்த்தால் உங்களை சுற்றி ஆவிகள் இருக்க வாய்ப்புள்ளது. புள்ளிகள் நீங்கள் புகைப்படம் எடுப்பது மிகவும் சாதரணமான ஒன்று. ஆனால் நீங்கள் புகைப்படம் எடுத்து அதனை சோதித்து பார்த்தால் அதில் சில புள்ளிகள் உங்கள் முகத்தை தெளிவில்லமால் காட்டும். அவ்வாறு இருந்தால் உங்களை சுற்றி நிச்சயம் பேய் இருக்க வாய்ப்புள்ளது.

முணுமுணுப்புகள் உங்கள் காதுகளுக்கு அருகே யாராவது தொடர்ந்து முணுமுணுப்பது போல உணர்வு ஏற்படுகிறதா? பல சமயங்களில் இது உங்கள் கற்பனையாக இருக்கலாம், ஆனால் இது பேய் இருப்பதற்கான முக்கியமான ஒரு அறிகுறி என்று அமானுஷ்ய ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கண்காணிக்கப்படுவது உங்களை தொடர்ந்து யாரோ பார்த்துக்கொண்டே இருப்பது போல உணர்கிறீர்களா? அவ்வாறு உணர்ந்தால் உங்களை பிடித்த இறந்த ஒருவரின் ஆன்மா உங்களை பார்த்து கொண்டே இருக்கிறது என்று அர்த்தம்.