‘உங்க பொண்ணு தூக்கு மாட்டிக்கிட்டா’.. மனைவியைக் கொன்றுவிட்டு மாமியாரிடம் நாடகம் ஆடிய யோகா டீச்சர்!?

 

‘உங்க பொண்ணு தூக்கு மாட்டிக்கிட்டா’.. மனைவியைக் கொன்றுவிட்டு மாமியாரிடம் நாடகம் ஆடிய யோகா டீச்சர்!?

இவர்கள் இரண்டு பேருமே யோகா ஆசிரியர்களாக இருந்து வந்த நிலையில், வேலூரில் உள்ள ஒரு யோகா மையத்தில் இரண்டு பேருக்கும் வேலை கிடைத்துள்ளது.

தேனி மாவட்டம், ஓரகுண்டா பகுதியில் வசித்து வரும் கருப்பசாமி (30) என்பவருக்கும் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஜீவிதா(27) என்ற பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இரண்டு பேருமே யோகா ஆசிரியர்களாக இருந்து வந்த நிலையில், வேலூரில் உள்ள ஒரு யோகா மையத்தில் இரண்டு பேருக்கும் வேலை கிடைத்துள்ளது.  திருமணம் ஆன பிறகு கருப்பசாமியும், ஜீவிதாவும் சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.

ttn

இவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் ஆனதிலிருந்து தகராறு நடந்து கொண்டே இருந்துள்ளது. இதே போலக் கடந்த 9 ஆம் தேதியும் அவர்களுக்குள் சண்டை வந்துள்ளது. உடனே ஜீவிதா அவரது அம்மாவுக்கு போன் செய்து வீட்டில் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். ஜீவிதா போன் செய்த சில மணி நேரங்களிலேயே கருப்பசாமி போன் செய்து, ‘ உங்கள் மகள் தூக்கு மாட்டிக்கிட்டா’ என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனே சேலத்திற்குக் கிளம்பிச் சென்று ஜீவிதா வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது ஜீவிதா மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

tn

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள்,  கருப்பசாமி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கருப்பசாமிக்கும் வேறொரு பெண்ணுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதனால் தான் அவர் என் பெண்ணை துன்புறுத்தி கொலை செய்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கருப்பசாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.