‘உங்க அம்மா தான வளத்துச்சு!’ – டிடிவி தினகரனிடம் அமைச்சரை கடுமையாக விமர்சித்த பெண்!
டெல்டா பகுதிகளைப் பார்வையிட சென்ற டிடிவி தினகரனிடம், பெண் ஒருவர் கோபமாக பேசும் காட்சி சமுகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை: டெல்டா பகுதிகளைப் பார்வையிட சென்ற டிடிவி தினகரனிடம், பெண் ஒருவர் கோபமாக பேசும் காட்சி சமுகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
டெல்டா மாவட்ட மக்களுக்கு முறையான நிவாரண உதவிகளை தமிழக அரசு செய்யவில்லை என டெல்டா வாசிகள் குற்றம் சாட்டுவது நாம் அனைவரும் அறிந்ததே. அங்கு பார்வையிட செல்லும் அமைச்சர்களை, டெல்டா மக்கள் நடத்தும் விதத்திலிருந்தே தமிழக அரசு மீது அவர்கள் எவ்வளவு கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும்.
‘உங்க அம்மா தான வளத்துச்சு!’ – டிடிவி தினகரனிடம் அமைச்சரை கடுமையாக விமர்சித்த பெண்!#TTVDhinakaran #dhinakaran #AMMK #DMK #Minister #angryspeech #lady #toptamilnews #ttn pic.twitter.com/iXLsFuvEim
— toptamilnews (@toptamilnews) December 3, 2018
குறிப்பாக, சொந்த மாவட்ட அமைச்சர்கள் மீது மக்கள் பெரும் அதிருப்தியில் இருக்கின்றனர். இந்நிலையில், டெல்டா மாவட்டங்களை பார்வையிட சென்ற டிடிவி தினகரனிடம், “உங்க அம்மா தான வளத்துச்சு.. இப்ப பாருங்க.. இனி மந்திரி ஆக முடியாது” என கோபத்துடன் கூறுகிறார். அதற்கு, “இனி அரசியலில் கூட இருக்க முடியாது” என டிடிவி பதிலளித்துள்ளார்.
இந்த வீடியோ சமுகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.