உங்கள் பக்கம் நிற்போம்: ரஞ்சித்துக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் தலித் பிரிவு!

 

உங்கள் பக்கம் நிற்போம்: ரஞ்சித்துக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் தலித் பிரிவு!

ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சையாகப் பேசியுள்ளதாக எழுந்த புகாரையடுத்து காங்கிரசின் தலித் பிரிவினர்  அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

ராஜ ராஜ சோழன் குறித்து சர்ச்சையாகப் பேசியுள்ளதாக எழுந்த புகாரையடுத்து காங்கிரசின் தலித் பிரிவினர்  அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் சர்ச்சையாகப் பேசியதாகப் புகார் எழுந்தது.  பா. ரஞ்சித்தின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர்.  இதைத் தொடர்ந்து பா. ரஞ்சித் மீது தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள்  காவல் ஆய்வாளர் தாமாக முன்வந்து  2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

ranjith

இதையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.  அதில், ‘வரலாற்றுத் தகவலின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும், தனது பேச்சு எந்த சமூகத்தினருக்கும் எதிரானது அல்ல’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தனது கருத்தை  சமூக வலைதளங்களில் தவறான நோக்கத்தில் பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.  இந்த மனு மீதான விசாரணை விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் பா.ரஞ்சித்துக்கு காங்கிரசின் தலித் பிரிவு ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து தங்கள்   டிவிட்டர் பக்கத்தில் பா. ரஞ்சித்தின்  சாதீயத்துக்கு எதிரான தொடர் முயற்சி மிகச் சிறப்பானது. அவர் பக்கம் நிற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளனர்.