உங்களது செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு: கேரளாவிற்கு கமல்ஹாசன் நன்றி
தமிழகத்திற்கு கேரளா நிதி அளித்தது மனிதத்தின் வெளிப்பாடு என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழகத்திற்கு கேரளா நிதி அளித்தது மனிதத்தின் வெளிப்பாடு என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அரசு தரப்பிலிருந்தும், தன்னார்வலர்கள் தரப்பிலிருந்தும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். மேலும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் நிதியுதவி வழங்கி வருகின்றனர். அந்த வகையில் கேரள அரசு சார்பில் தமிழகத்திற்கு ரூ 10 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்கு @CMOKerala அவர்களுக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு!
— Kamal Haasan (@ikamalhaasan) November 28, 2018
இந்நிலையில், கேரள அரசு நிதியுதவி அளித்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கஜா புயல் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு கேரள அரசு சார்பாக ரூபாய் 10 கோடியை அளித்தற்கு @CMOKerala அவர்களுக்கு நன்றி. வேண்டுகோள் வைத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக நடவடிக்கை எடுத்த உங்கள் செயல்பாடு மனிதத்தின் வெளிப்பாடு என பதிவிட்டுள்ளார்.