ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி…துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வருகை!

 

ஈஷா  யோகா மையத்தில் மகாசிவராத்திரி…துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடு வருகை!

இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள இந்த விழாவில் இசை நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம்  என கொண்டாடப்படவுள்ளது. 

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் 
கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.

ttn

இன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள இந்த விழாவில் இசை நிகழ்ச்சி, ஆட்டம் பாட்டம்  என கொண்டாடப்படவுள்ளது. 

ttn

இந்நிலையில் ஷா யோகா மையத்தின் மகா சிவராத்திரி விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்.

ttn

இதற்காக இன்று விமானம் மூலம் கோவைக்கு வரும் துணை குடியரசுத் தலைவர், பீளமேட்டில் தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்கிறார். பின்னர், காரில் ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். இரவு ஈஷா யோகா மையத்தில் இன்று இரவு தங்கும்  அவர்,  நாளை காலை டெல்லிக்கு செல்லவிருக்கிறார். இதனால் கோவையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.