ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக படத்திலிருந்து விலகும் விஜய் சேதுபதி!

 

ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக படத்திலிருந்து விலகும் விஜய் சேதுபதி!

வித்தியாசமான வேடங்களிலும்,பரீட்சார்த்தமான கதைகளிலும் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக படத்திலிருந்து விலகும் விஜய் சேதுபதி!

வித்தியாசமான வேடங்களிலும்,பரீட்சார்த்தமான கதைகளிலும் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். ஸ்ரீபதி ரங்கசாமி இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்த படத்தை பெரும் பொருட்செலவில் தர்மோசர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனே நேரடியாக படப்பிடிப்புக்கு வந்து விஜய் சேதுபதிக்கு பயிற்சியளிக்க இருப்பதாகவும், இந்த படம் அடுத்த வருடம் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று நடிகர் விஜய் சேதுபதியும் தெரிவித்திருந்தார். 
இந்நிலையில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு ரசிகர்களிடையே எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. தவிர, இலங்கை வாழ் தமிழராக முத்தையா முரளிதரன் இருந்த போதிலும், ஈழத்தமிழர்களின் பிரச்னையின்  போது தமிழர்களுக்காக  முத்தையா முரளிதரன் எந்தவொரு குரலும் கொடுக்கவில்லை. இறுதி கட்டப் போர் சமயங்களிலும் முத்தையா முரளிதரன் மெளனமாகவே இருந்து வந்தார். எனவே அவரது கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் விஜய் சேதுபதிக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

இதையடுத்து, ஈழ தமிழர்களின் உணர்வுகளுக்கு மரியாதைக் கொடுத்து, முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்திலிருந்து விஜய் சேதுபதி விலக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் பரவி வருகிறது. படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகுவதாக விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.