ஈரானில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 853-ஆக உயர்வு

 

ஈரானில் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 853-ஆக உயர்வு

கொரோனா வைரஸ் காய்ச்சலால் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 853-ஆக உயர்ந்துள்ளது.

டெஹ்ரான்: கொரோனா வைரஸ் காய்ச்சலால் ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 853-ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. பல்வேறு நாடுகள் கொரோனா வைரஸை எதிர்கொள்ள பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ttn

ஈரானில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 724-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாட்டில் கொரோனா வைரஸால் புதிதாக 129 பேர் உயிரிழந்து உள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் காய்ச்சலால் ஈரானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சீனா, இத்தாலிக்கு அடுத்து ஈரானில்தான் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அந்த நாட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட பிறகு குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.