ஈராக் போராட்டத்தில் துப்பாக்கி சூடு – பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

 

ஈராக் போராட்டத்தில் துப்பாக்கி சூடு – பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு

ஈராக் நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதியபோது, போலீசாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

ஈராக் நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியதியபோது, போலீசாரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் பலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.

ஈராக்கில் நாட்டில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் ஆகியவை அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை மற்றும் அரசியல் ரீதியான ஊழல்கள் ஆகியவையும் அதிகரித்திருக்கின்றன. இதனை எதிர்த்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் போராட்ட களத்தில் குதித்து, தற்போது ஆட்சியில் இருக்கும் அரசுக்கு எதிராக கரகோஷங்கள் எழுப்பி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

iran

இதுபோன்ற ஆர்ப்பாட்டம் நேற்று ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் திரளாக  கூடியதால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனை சீர் செய்ய காவல்துறையினர் துவக்கத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒத்துழைக்காததால், தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். 

இதனிடையே வன்முறை வெடித்ததால், காவல்துறையினருக்கு துப்பாக்கிச் சூடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதில் தற்போது 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மொத்த பாலி எண்ணிக்கை 35 ஆக உயர்ந்திருக்கிறது.

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தில் தற்போதுவரை பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. ராணுவ பாதுகாப்பும், போலீஸ் பாதுகாப்பும் தொடர்ந்து 4 நாட்களாக போடப்பட்டுள்ளன.

-vicky