ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரசாரம் செய்தால் போதும்: புகழேந்தி அதிரடி

 

ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரசாரம் செய்தால் போதும்: புகழேந்தி அதிரடி

ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரசாரம் செய்தாலே போதும் அமமுக திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

திருவாரூர்: ஈபிஎஸ், ஓபிஎஸ் பிரசாரம் செய்தாலே போதும் அமமுக திருவாரூர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுவிடும் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தல் 28-ம் தேதி நடைபெற இருக்கிறது. திமுக, அமமுக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகளும் இன்று தங்களது வேட்பாளரை அறிவிக்க இருக்கின்றன. மேலும், திருவாரூரில் வெல்வதற்காக இந்த மூன்று கட்சிகளும் முஷ்டி முறுக்குவதால் இந்த தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திருவாரூர் தேர்தல் குறித்து தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோர் பரப்புரை செய்தாலேபோதும் நாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம். திருவாரூரில் யார் போட்டியிட்டாலும் அவரை எதிர்கொள்ள அமமுக தயாராக உள்ளது. கலைஞர் கருணாநிதி இடத்தில் யாரையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு திருவாரூர் மக்களுக்கு விருப்பம் இல்லை என்றார்.