இ-பாடசாலை திட்டத்தின் கீழ் புதிதாக 200 பாட புத்தகங்கள் – நிர்மலா சீதாராமன்

 

இ-பாடசாலை திட்டத்தின் கீழ் புதிதாக 200 பாட புத்தகங்கள் – நிர்மலா சீதாராமன்

இ-பாடசாலை திட்டத்தின் கீழ் புதியதாக மேலும் 200 பாட புத்தகங்கள் சேர்க்கப்படும்

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனைகளை சரிசெய்ய சுயசார்பு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதையடுத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நான்கு கட்டமாக அந்த நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை அறிவித்தார். நேற்று தனது நான்காவது உரையில் அவர் பேசுகையில் நிலக்கரி, தாதுக்கள் பாதுகாப்பு உற்பத்தி, வான்வெளி மேலாண்மை, எம்.ஆர்.ஓக்கள் மின் விநியோக நிறுவனங்கள், விண்வெளி துறைகள், அணுசக்தி ஆகிய துறைகளில் பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்களை நிதியமைச்சர் அறிவித்தார்.

ttn

இந்த நிலையில், இன்று ஐந்தாவது கட்டமாக ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு குறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி நிலம், தொழிலாளர் நலன், பணப் புழக்கம் தொடர்பான நிதி ஒதுக்கீடுகள் குறித்து அவர் அறிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை உடனே மீண்டும் திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வியை பெற அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன. இதற்காக இ-பாடசாலை திட்டத்தின் கீழ் புதியதாக மேலும் 200 பாட புத்தகங்கள் சேர்க்கப்படும். ஏற்கனவே 3 கல்வி சேனல்கள் உள்ளது. தற்போது ஆன்லைன் வழி கல்விக்காக 12 புதிய கல்வி சேனல்கள் தொடங்கப்பட உள்ளது. புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்களுக்காக தனியார் டி.டி.எச். நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.