இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய எஸ்வி சேகர்… அந்தர் பல்டி அடிக்கக் காரணம் என்ன?
எஸ்வி சேகர் பாஜக ஆதாரவாளர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் வெளியிடும் கருத்துக்கள் யாவும் பாஜகவிற்கு ஆதரவாக இருப்பதால் அது இஸ்லாமியர்களுக்கு எதிராகவே இருந்து வருகிறது.
எஸ்வி சேகர் பாஜக ஆதாரவாளர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் வெளியிடும் கருத்துக்கள் யாவும் பாஜகவிற்கு ஆதரவாக இருப்பதால் அது இஸ்லாமியர்களுக்கு எதிராகவே இருந்து வருகிறது. கொரோனா பரவலில் தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு தான் மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்று ஒரு சாரார் தொடர்ந்து கூறி வருகின்றனர். அந்த மாதிரியான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் வெளிவரும் போது எஸ்வி சேகர் அதற்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்து வருவார்.
இந்நிலையில் சமீப காலங்களாக அவர் வெளியிடும் கருத்துக்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு “கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், (ஊநீர்) plasma ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை.” என்று பதிவிட்டிருந்தார்.
<
கொடிய கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு பல்வேறு சிகிச்சைகளை அரசுகள் மேற்கொண்டு வரும் நிலையில், (ஊநீர்) plasma ரத்த தானம் செய்ய முன் வந்திருக்கும் இஸ்லாமிய மக்களை பாராட்டி, நன்றிகள் சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம். இதுவே மத ஒற்றுமை.?@PTI_News @thatsTamil @WINNEWS_IN @polimernews
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) April 21, 2020
p>
தற்போது ரமலான் நோன்பு ஆரம்பித்திருக்கிறது. எஸ்வி சேகர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முஸ்லீம் பெண் ஒருவருக்கு அரிசிப்பையை வழங்குகிறார். மேலும் “இன்று ரமலான் நோன்பு முதல் நாள் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்று ரமலான் நோன்பு முதல் நாள். ? pic.twitter.com/GLfCIRtO4S
— S.VE.SHEKHER?? (@SVESHEKHER) April 25, 2020
இதைப் பார்த்த இணையவாசிகள் இப்படி நடக்க வாய்ப்பில்லை. அது முஸ்லீம் பெண்தானா என்று பாருங்கள் என தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.