இஸ்லாமியர்களின் மீதான காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து 3 ஆவது நாளாக போராட்டம்

 

இஸ்லாமியர்களின் மீதான காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்து 3 ஆவது நாளாக போராட்டம்

மதுரை மாப்பாளையம் ஜின்னாதிடல் பகுதியில் காவல்துறையை கண்டித்து 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

மதுரை மாப்பாளையம் ஜின்னாதிடல் பகுதியில் காவல்துறையை கண்டித்து 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 

வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் தடியடி சம்பவத்தை கண்டித்து மதுரை மகபூப்பாளையம் ஜின்னாதிடல் பகுதியில் 14 ம் தேதி  இரவு முதல் தொடங்கிய போரட்டமானது மூன்றாவது நாளான இன்றும்  நீடிக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய பெண்கள், இஸ்லாமியர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், இயக்கங்களை  சார்ந்தவர்களும் பங்கேற்றுள்ளனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து, கடந்த கடந்த 14 ஆம் தேதி பழைய வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரமாக அவர்கள்  போராட்டம் நடத்தியதால் போலீசார் அவர்களை கலைந்து  செல்லுமாறு கூறியதாக தெரிகிறது.  இதனால் போலீசார் , மற்றும் போராட்டக்காரர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தடியடி நடந்தது. இதில் 120 பேர் கைது செய்யப்பட்டனர்.  இதை கண்டித்து பெண்கள் உள்பட பலரும் பல்வேறு இடங்களில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.