இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருது!
இஸ்ரோ தலைவர் சிவனுக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் சிவன் கலந்துகொள்ளவில்லை.
சென்னை : இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல் கலாம் விருதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசால் கடந்த மூன்று ஆண்டுகளாக அறிவியல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்களுக்கு அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான விருது இஸ்ரோ தலைவர் சிவனுக்கு வழங்கப்பட இருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் சிவன் கலந்துகொள்ளவில்லை.
இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து விருதை பெற்று கொண்டார்.
முன்னதாக அறிவியல் தொழில் நுட்பத்தில் ஏராளமான விருதுகளை வாங்கி குவித்துள்ள சிவன் 1999 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விருது, 2007 ஆம் ஆண்டு இஸ்ரோ விருது, 2012 ஆம் ஆண்டில் டாக்டர் பிரயன் ராய் விருது ஆகியவற்றை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆண் பெண் வேறுபாடின்றி இஸ்ரோவில் திறமையானவர்களுக்கு முன்னுரிமைஅளிக்கப்படும் என்று தெரிவித்தார்.