இவர் தான் சிம்டாங்காரனா?: தளபதிக்கு புதிய அடையாளம் கொடுத்த பாடலாசிரியர்!
தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘சிம்டாங்காரன்’ என்ற வார்த்தைக்கு பாடலாசிரியர் விவேக் விளக்கமளித்துள்ளார்.
சென்னை: தளபதி விஜய் நடித்துள்ள ‘சர்கார்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘சிம்டாங்காரன்’ என்ற வார்த்தைக்கு பாடலாசிரியர் விவேக் விளக்கமளித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘சர்கார்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் பாடலான ‘சிம்டாங்காரன்’ பாடல் லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் அக்.2ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், சர்கார் கொண்டாட்டத்துக்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. முதல் கொண்டாட்டமாக ஏ.ஆர்.ரகுமான் ஸ்டைலில் உருவாகியுள்ள குத்துப்பாடலான ‘சிம்டாங்காரன்’ பாடல் இன்று வெளியாகவுள்ளது.
#Simtaangaran – Chennai Tamil
கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன்
Attractive Young Man – Charismatic / Fearless / Audacious
கண் சிமிட்டாம சிலர பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் .. நம் #சிம்டாங்காரன் pic.twitter.com/uSWZP8j6hu
— Vivek Lyricist (@Lyricist_Vivek) September 24, 2018
இந்நிலையில், ‘சிம்டாங்காரன்’ என்றால் என்ன என்று சமூக வலைத்தளங்கள்ல் ஏராளமான சந்தேகங்கள் எழுந்தன. இது குறித்து பாடலாசிரியர் விவேக் விளக்கம் அளித்துள்ளார். அவரது ட்வீட்டில், ’சிம்டாங்காரன்’ என்றால் கவர்ந்து இழுப்பவன், பயமற்றவன், துடுக்கானவன் என கூறியுள்ளார். மேலும், ‘கண் சிமிட்டாம சிலர் பார்க்க தோனுமே. அந்த ஒருவன். நம் சிம்டாங்காரன்’ என்று பதிவிட்டுள்ளார்.