“இவரை எதுக்கு எடுத்தீங்க”- புதிய சென்னை வீரர் மீது கடுப்பான ரசிகர்கள்!

 

“இவரை எதுக்கு எடுத்தீங்க”- புதிய சென்னை வீரர் மீது கடுப்பான ரசிகர்கள்!

“இவரை எதுக்கு எடுத்தீங்க” – புதிய சென்னை வீரர் மீது கடுப்பான ரசிகர்கள்!

இந்திய சுழற்பந்து வீச்சாளரான பியூஸ் சாவ்லாவை 6.75 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இவருக்கு இத்தனை கோடி சரியானதா? என ட்விட்டரில் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உள்ளூர் டி.20 கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல் டி.20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதுவரை 12 சீசன்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 13வது சீசனுக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.                            Ipl

பரபரப்பாக நடைபெற்று வரும் ஏலத்தில் இங்கிலாந்து அணியின் இளம் ஆல் ரவுண்டரான சாம் கர்ரனை போட்டி போட்டு 5.50 கோடிக்கு அணியில் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்தபடியாக கவுட்டர் நைல்லிற்கு கடுமையாக போராடியது.

எதிர்தரப்பில் கவுட்டர் நைல்லை விட்டுகொடுக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணி 8 கோடி வரை சென்றதால், கவுட்டர் நைல்லை ஏலத்தில் எடுக்கும் முடிவில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பின்வாங்கியது.

அடுத்தபடியாக பியூஸ் சாவ்லா ஏலத்திற்கு வந்ததும் அவரை அணியில் எடுக்க அதிக ஆர்வம் காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதியாக 6.75 கோடி ரூபாய் கொடுத்து ஏலத்தில் எடுத்துள்ளது.

வெறும் குறைவான தொகையுடன் ஏலத்தில் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பியூஸ் சாவ்லாவிற்காக போராடி 6.75 கோடி ரூபாயை கொடுத்தது. ஏற்கனவே அணியில் 4 ஸ்பின்னர்கள் இருக்கும் நிலையில் பியூஸ் சாவ்லாவை எடுத்து பணத்தை வீணாக்கிவிட்டதாக சமூக வலைதளங்கள் மூலம் சென்னை ரசிகர்களே கவலை தெரிவித்து வருகின்றனர்.

அடுத்ததாக, 2 கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் ஹசல் உட்டை எடுத்தது. நாள் முடிவில், 20 லட்சம் ரூபாய்க்கு தமிழக வீரர் சாய் கிஷோரை எடுத்தது.