இழுத்து மூடப்படுகிறதா தனுஷின் உண்டர்பார் நிறுவனம்; மேனேஜர் பதில்?!..

 

இழுத்து மூடப்படுகிறதா தனுஷின் உண்டர்பார் நிறுவனம்; மேனேஜர் பதில்?!..

தனுஷுக்கும் வினோத்துக்கும் கருத்து வேறுபாடு என வீடியோ ஒன்றும் உலா வந்தது. தற்போது வினோத் இந்த பிரச்னை குறித்து வாய் திறந்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், உண்டர்பார் எனும் தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி பல படங்களை தயாரித்து வந்தார். இந்நிறுவனம் கடைசியாக ‘மாரி 2’ படத்தை தயாரித்தது. அதன்பிறகு உண்டர்பார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக எந்த படத்தையும் தயாரிப்பதாக அறிவிக்கவில்லை.

உண்டர்பார்

இந்த சூழ்நிலையில், உண்டர்பார் நிர்வாக தயாரிப்பாளர் வினோத் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினார். அதுமட்டுமல்லாது அவர் விஷாலை வைத்து தன் சொந்த பேனரில் படம் தயாரிக்க உள்ளார்.

இதனால் உண்டர்பார் நிறுவனத்தின் கதை முடிந்தது என சமூக வலைதளங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டது. தனுஷுக்கும் வினோத்துக்கும் கருத்து வேறுபாடு என வீடியோ ஒன்றும் உலா வந்தது. தற்போது வினோத் இந்த பிரச்னை குறித்து வாய் திறந்திருக்கிறார். இதுகுறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், இணையதளத்தில் உலா வரும் தகவல்கள் அர்த்தமற்றது. நான் எப்போதும் உண்டர்பார் நிறுவனத்தில் முக்கிய பங்கு வகிப்பவன். எனக்கு தனுஷுக்கும் 10 வருட பழக்கம், அதனால் இதுபோன்ற வதந்திக்கு எல்லாம் நான் விளக்கம் அளித்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.

வினோத்

மேலும் அவர், தனுஷ்தான் என்னை தனியாக படம் பண்ண சொல்லி உத்வேகம் அளித்தார். என் முதல் ப்ராஜெக்ட் விசால் உடன் அமையும் அவரே காரணம். தனுஷ் என் தயாரிப்பில் கூட படம் பண்ணுவார் என்றார்.

அதேபோல் உண்டர்பார் நிறுவனம் தற்போது படம் பண்ணாதது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், தனுஷ் கடந்த ஆண்டு புக்கான படங்களில் பிஸியாக இருக்கிறார். வெளியே இருந்து பார்க்கும் உங்களுக்கு படம் எதுவும் இல்லாதது போல் தோன்றினால், கம்பெனியை மூடப்போகிறோம் என அர்த்தம் கிடையாது. எங்கள் கையில் தற்போது சில படங்கள் உள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.