இள நரையை குறைக்க உதவும் அற்புத மூலிகை!

 

இள நரையை குறைக்க உதவும் அற்புத மூலிகை!

மாறிவரும் கால மாற்றங்களினால் இளம் வயது ஆண் மற்றும் பெண்களுக்கு கூட எளிதில் நரை முடி வந்துவிடுகிறது.நரை முடியில் இருந்து நம்மை நாமே காத்து கொள்வதற்கு சித்தர்கள் கூறியுள்ள அற்புத மூலிகையை பற்றி இந்த பதிவில் பார்போம்.

தற்போதைய தலைமுறையினருக்கு வெள்ளை முடி இளம் வயதிலேயே வந்துவிடுகிறது. இதனை மறைக்க பலரும் பல்வேறு ஹேர் டைகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் அதனால் வெள்ளை முடி தற்காலிகமாக மறையுமே தவிர போகாது அப்படியே இருக்கும். 

sithrakal

அதுமட்டுமன்றி, வெள்ளை முடியை மறைக்க கண்ட கண்ட பொருட்களை வாங்கி முடிக்கு தடவுவதால், பல்வேறு அலர்ஜிகளும் ஏற்படுகின்றன. ஆகவே இவற்றையெல்லாம் தவிர்க்க, இயற்கை முறையில் வெள்ளை முடியை எப்படி தீங்கு இன்றி நிரந்தரமாக  கருமையாக்குவதற்கு சித்தர்கள் கூறிய வழிமுறைகளை பற்றி பார்போம்.

சிவகரந்தை என்ற ஒரு மூலிகை இருக்கிறது. இதை பூ பூப்பதற்கு முன்பு பிடுங்கி நிழலில் உலர்த்தி இடித்து சலித்து வைத்துகொள்ள வேண்டும்.

 

grayhgj

அத்தோடு கரிசலாங்கண்ணி இலையையும் உலர்த்தி பொடி செய்து சிவகரந்தை பொடியுடன் சமமாக கலந்து தினசரி காலை மாலை இருவேளையும் சுத்தமான பசு நெய்யில் கலந்து ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் இளநரை கண்டிப்பாக மறைந்து முடி கருத்துவிடும் என்று சித்தர்கள் பல்வேறு நூல்களில் தெரிவித்துள்ளனர்.

இந்த மருந்து சாப்பிடும் காலத்தில் மது மற்றும் புகையிலை நிச்சயம் பயன்படுத்த கூடாது என்றும் நம் முன்னோர்கள் பல்வேறு ஜோதிட கிரந்தங்களில் தெரிவித்துள்ளனர். இந்த மூ லிகை மருந்தினை உட்கொள்ளும் காலங்களில் அதிகபடியான காரத்தையும் புளிப்பையும் குறைக்க வேண்டும் என்றும் சித்தர்கள் கூறியுள்ளன்னர்.