இளையோர் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பேக்கர் தங்கப் பதக்கம்

 

இளையோர் ஒலிம்பிக்: துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனு பேக்கர் தங்கப் பதக்கம்

இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மனு பேக்கர் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்

ப்யூனோஸ் ஏர்ஸ் (அர்ஜெண்டினா): இளையோர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் மனு பேக்கர் தங்கப் பதக்கம்  வென்றுள்ளார்.

கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த 6-ம் தேதி அர்ஜெண்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற 18-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த 4000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் 69 பேர் 13 விளையாட்டுகளில் பங்கேற்றுள்ளன.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவு துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் துஷர் மானே வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இந்நிலையில், மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் மனு பேக்கர் 236.5 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இளையோர் ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமைக்கு மனு பேக்கர் சொந்தக்காரரானார்.

நடப்பு தொடரில் முன்னதாக, இந்தியாவின் ஜெரேமி பளுதூக்குதலில் தங்கம் வென்றார். ஷாகு மேன் மற்றும் மெஹுலி கோஷ் ஆகியோர் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் 10 மீட்டர் ரைஃபெல் போட்டியில் வெள்ளி வென்றனர். இதன் மூலம், 2 தங்கம், 3 வெள்ளி உட்பட 5 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.