இளையராஜா நிகழ்ச்சியை தடுக்கவே நாடகம்: கொந்தளிக்கும் விஷால்

 

இளையராஜா நிகழ்ச்சியை தடுக்கவே நாடகம்: கொந்தளிக்கும் விஷால்

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இளையராஜா நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இளையராஜா நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்பதற்காக சிலர் திட்டமிட்டு செயல்படுவதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டியுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுவிடம் ஆலோசிக்காமல் பல விடயங்களில் விஷால் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவதாக தயாரிப்பாளர்கள் சங்கத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, தி.நிகரில் உள்ள சங்க அலுவலகம் முன்பு கூடிய டி.சிவா, கே.ராஜன், ஏ.எல்.அழகப்பன், ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், விடியல் சேகர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள், விஷாலுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.

vishal

அதோடு இன்றி, தயாரிப்பாளர் சங்க அறைகளுக்குப் பூட்டு போட்டு, அதன் சாவியை அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்து பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

producers

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் நடத்தப்பட உள்ள இசையமைப்பாளர் இளையராஜா நிகழ்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளதாக விஷால் தெரிவித்துள்ளார்.

மேலும், திட்டமிட்டபடி இளையராஜா நிகழ்ச்சியை நடத்தி சங்க உறுப்பினர்களுக்கு நிலம் வாங்கித்தருவோம் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை, அனைத்து கணக்கு வழக்குகளும் பொதுக்குழுவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.