இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி! உற்சாகத்தில் ரசிகர்கள்

 

இளையராஜா இசையில் மீண்டும் எஸ்.பி.பி! உற்சாகத்தில் ரசிகர்கள்

இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தமிழரசன்’.

இயக்குநர் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘தமிழரசன்’. எஸ்.என்.எஸ்.மூவீஸ் தயாரித்து வரும் இதில் கதாநாயகியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார்.

மேலும் இதில் பூமிகா, சோனு சூட், யோகிபாபு, ரோபோ ஷங்கர், முனீஸ்காந்த், இயக்குநர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ், மலையாள நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இளையராஜா

இந்த நிலையில் இதில் எஸ்.பி.பி ஒரு பாடல் படியுள்ளதாக கூறப்படுகிறது. சில ஆண்டுகளாக இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரல் கேட்க முடியாத ஒரு சூழல் இருந்தால் ரசிகர்கள் கவலையுடன் இருந்தனர். தற்போது மீண்டும் இருவரும் சேர்ந்து பணியாற்றி உளள்து அவர்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இளையராஜா

மேலும் இந்தப் பாடல் பதிவின் போது இசைஞானியும், எஸ்.பி.பி அவர்களும் பழைய நிகழ்வுகளை நட்போடு பகிர்ந்து கொண்டாதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவுபெற்று இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும் விரைவில் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முன்னதாக இந்த படத்திற்காகப் பல வருடங்களுக்குப் பிறகு யேசுதாஸ் சென்னை வந்து ஒரு பாடலை பாடிவிட்டுச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.