’இளையராஜா இசையில் பாட அழைத்தால் ஓடி விடுவேன்’…என்னங்க ரம்யா நம்பீசன் இப்படி சொல்றாங்க…

 

’இளையராஜா இசையில் பாட அழைத்தால் ஓடி விடுவேன்’…என்னங்க ரம்யா நம்பீசன் இப்படி சொல்றாங்க…

‘அவர் இசையில் பாட வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக பயத்தாலேயே சொதப்பிவிடுவேன்.

‘அவர் இசையில் பாட வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக பயத்தாலேயே சொதப்பிவிடுவேன். அவரது இசை நிகழ்ச்சியில் அவர் அமர்ந்திருந்த மேடையில் பாட வாய்ப்புக் கிடைத்த பாக்கியம் ஒன்றே போதும்’என்கிறார் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ என்று நீரூபித்த தமிழ் சினிமாவின் டார்லிங் ரம்யா நம்பீசன்.

ரம்யா நம்பீசனுக்கு வாய்ப்புகள் நிறைய வந்தாலும் ‘பீட்சா’, ’சேதுபதி’  சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துக்கொண்டிருக்கும் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா?’ என்று தேர்ந்தெடுத்து நடிக்கிறார். நேற்று முன் தினம் நடந்த ‘ந.எ.தெ’ படத்தின் சக்சஸ் விழாவில் கலந்துகொண்ட ரம்யா நிகழ்வுக்குப் பின்னர் சந்தித்தபோது,’எல்லோரும் எப்படி புதுமுகங்களின் படங்களில் கூட நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

ramya

எனக்கு மார்க்கெட் பற்றி கவலை இல்லை. ’சேதுபதி’க்கு பிறகு அதிகமாக அம்மா கதாபாத்திரங்களே வந்தன. இந்த படம் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாக வந்தது. முற்றிலும் புதியவர்கள், இளைஞர்கள் என்பதால் ஒப்புக்கொண்டேன். அம்மாவாக நடிப்பதை விட இதுபோன்ற வேடங்களை அதிகம் விரும்புகிறேன். பெரிய ஹீரோ படம் என்றாலே அம்மா வேடங்களாக வருகின்றன.

இன்னொரு பக்கம் மிகவும் வேண்டப்பட்ட சிலர் ஒரு காட்சி, இரு காட்சிகளில் நடிக்க அழைத்து தர்மசங்கடப்படுத்துகிறார்கள்.என்னை கவுரவ நடிகையாகவே மாற்றி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எல்லாம் நண்பர்களுக்காக நடித்தவை. இனி குறைத்துக்கொள்வேன். நான் தேர்ந்தெடுத்து எனக்கு பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக்கொள்வேன்.

ramya

அடுத்து பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் ’தமிழரசன்’ படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் அத்தனை முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிவிட்டதால் ராஜாவின் இசையிலும் பாடுவீர்களா என்று கேட்கிறார்கள். இளையராஜா என்றால் எனக்கு உயிர். விபரம் தெரிந்த பிறகு அவர் பாடல்களைக் கேட்காத நாளே என் வாழ்வில் இல்லை. ஆனால் அவர் முன்னால் ரெகார்டிங்கில் பாட வாய்ப்புக் கிடைத்தால் பயத்தாலேயே சொதப்பி விடுவேன். ’இளையராஜா 75’ நிகழ்ச்சியில் அவர் முன்பு பாடியதே நான் செய்த பாக்கியம்’ என்று பரவசப்படுகிறார் ரம்யா என்கிற தேவதை.