இளையராஜாவைத் திட்டித்தீர்ப்பவர்களுக்கு செருப்படி கொடுக்கும் ‘96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா…
’96 படத்தில் தன் பாடல்கள் படம் முழுக்க பயன்படுத்தப்பட்டது குறித்த இளையராஜாவின் பேட்டி பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அத்தனை சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வலையில் தனது வயலினால் பதில் அளித்துள்ளார்.
’96 படத்தில் தன் பாடல்கள் படம் முழுக்க பயன்படுத்தப்பட்டது குறித்த இளையராஜாவின் பேட்டி பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அப்படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா அத்தனை சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வலையில் தனது வயலினால் பதில் அளித்துள்ளார்.
கோவிந்த் வசந்தா ஒரு சிறந்த வயலினிஸ்ட், ஒரு சிறந்த இசையமைப்பாளர், பாடகர் என்பதையெல்லாம் தாண்டி அவர் தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வதென்னவோ இளையராஜாவின் ரசிகராகத்தான். அவரது தாய்க்குடம் பிரிட்ஜ் என்னும் பாண்ட் இசைக்குழு ராஜாவின் பாடல்களை வெறிகொண்டு பாடுவார்கள்.கோவிந்த் வசந்தாவின் நிகழ்ச்சிகளை ராஜா கைதட்டி ரசித்து மகிழ்ந்த பல வீடியோக்களை யூ டியூப்களில் பார்க்கலாம்.
இப்படிப்பட்ட ரசிகரை ஒரு கலைஞனை ராஜா திட்டமிட்டு புண்படுத்தியிருக்கவாய்ப்பில்லை. தனது பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்திய ராஜாவின் தரம் என்றால் என்னவென்றே தெரியாத சுப்ரமணியத்துக்காரர்களின் மேல் இருந்த கோபம் அது.
Forever Fan!!#Ilayaraja #IsaiGnani #thalapathi #Rajinikanth pic.twitter.com/ALyLB7f9eA
— Govind Vasantha (@govind_vasantha) May 29, 2019
போகட்டும் நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்படி சர்ச்சைகளுக்கு ‘என்றென்றும் ராஜாவின் ரசிகன்’ என்றொரு சிறு குறிப்பு மட்டும் வைத்து விட்டு ராஜாவின் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ பாடலை கோவிந்த் வசந்தா வயலினில் வாசிக்கிறார் கேளுங்கள். ராஜாவையும் கோவிந்த் வசந்தாவையும் கோர்த்துவிட நினைக்கும் அத்தனை பேருக்கும் அந்த 40 செகண்ட் வயலினில் பதில் இருக்கிறது.