இளையராஜாவிடம் ராயல்டி கேட்கும் பிரபல தயாரிப்பாளர்!

 

இளையராஜாவிடம் ராயல்டி கேட்கும் பிரபல தயாரிப்பாளர்!

இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு ராயல்டி தொகை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இளையராஜாவிடம் ராயல்டி கோரியுள்ளார்.

சென்னை: இளையராஜா இசையமைத்த பாடல்களுக்கு ராயல்டி தொகை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரபல தயாரிப்பாளர் ஒருவர் இளையராஜாவிடம் ராயல்டி கோரியுள்ளார்.

இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள கச்சேரிகளில், மேடைகளில் பாடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்றும், நிகழ்ச்சியின் அளவு, பாடகர்களின் பட்டியலை பொருத்து ரூ.20 லட்சம் முதல் ரூ.30,000 வரை ராயல்டி தொகை வசூலிக்கப்படும் என இளையராஜா தெரிவித்திருந்தார். தனது பாடல்களுக்கு சினிமா இசை கலைஞர்கள் சங்கத்திற்கு ராயல்டி தொகையை வசூலிக்கும் உரிமத்தை இளையராஜா வழங்கியுள்ளார்.

இந்நிலையில், பாடலகள் ரெக்கார்டிங் முதல் அந்த பாடல்களை விளம்பரப்படுத்துவது வரை அனைத்து செலவுகளையும் ஏற்பது தயாரிப்பாளர்கள் தான். அப்படியெனில் இளையராஜா பெறும் ராயல்டி தொகையில் நான் ஏன் பங்கு கேட்கக் கூடாது என பிரபல தயாரிப்பாளார் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

krajan

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவரான ராஜன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ராயல்டி விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் ஓரங்கட்டப்படுவது ஏன் எனவும் கேட்டுள்ளார்.

தியாகராஜர் உள்ளிட்ட பல இசை மேதைகளின் பாடல்களை, அதன் ராகங்களை அதிகமாகவே கையாண்ட ராஜா இளையராஜா அவர்களது வாரிசுகளுக்கு ராயல்டி கொடுத்தாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ராயல்டி விஷயத்தில் இளையராஜா மிகவும் கறாரான பேர்வழி என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.