இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் வெட்டி கொலை: கேரளாவில் பரபரப்பு!

 

இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் வெட்டி கொலை: கேரளாவில் பரபரப்பு!

கேரளாவில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த இரண்டு தொண்டர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா: கேரளாவில் இளைஞர் காங்கிரஸை சேர்ந்த இரண்டு தொண்டர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த கிரிபேஷ், சரத் லால் இருவரும் இளைஞர் காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களாக பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு உள்ளூர் கட்சிகளுடன் சற்று பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிரிபேஷ் மற்றும் சரத் லால் இருசக்கர வாகனத்தில் காசர்கோடு பகுதியில் சென்றபோது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இதையடுத்து  கிரிபீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சரத் லால் உயிருக்கு போராடிய நிலையில் மங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரும்  உயிரிழந்தார்.

இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலை தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசியல் ரீதியான மோதலால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதனிடையே இருவர் கொலைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் காரணம் என இளைஞர் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.