இளைஞருடன் மது அருந்திய மாணவிகள்…கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மகளிர் ஆணையம்!

 

இளைஞருடன் மது அருந்திய மாணவிகள்…கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பிய தேசிய மகளிர் ஆணையம்!

கல்லூரியிலிருந்து  நீக்குவதாக  கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் மனமுடைந்த மாணவி  ஒருவர்  தற்கொலைக்கு முயன்றதாகத்  தகவல் வெளியாகியது

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் கல்லூரி மாணவிகள் சக மாணவன் ஒருவருடன் அமர்ந்து மது அருந்தும் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில்  வைரலானது.

 


 

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் 3 மாணவிகள்  மற்றும் மாணவன் ஒருவரை  கல்லூரியிலிருந்து  நீக்குவதாக  கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில் மனமுடைந்த மாணவி  ஒருவர்  தற்கொலைக்கு முயன்றதாகத்  தகவல் வெளியாகியது. 

 

இதற்கு எதிராக தனியார் கல்லூரி ஊழியர்கள் சங்கம் சார்பில் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில்  தருமபுரம் ஆதினம் கல்லூரிக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்க கோரியும், வரும் 30 நாட்களுக்குள் பதிலளிக்கும்படியும் கல்லூரி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.