இளைஞரின் காதில் கூடுகட்டிய சிலந்தி!!

 

இளைஞரின் காதில் கூடுகட்டிய சிலந்தி!!

தனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், சிலந்தி உயிருடன் இருப்பதாகவும், அது காதுக்குள் கூடுகட்டி வருவதாகவும் லீயிடம் தெரிவித்தனர்

காது வலிப்பதாக மருத்துவமனை வந்த இளைஞரின் காதுக்குள் உயிருடன் கூடுகட்டி கொண்டிருந்த சிலந்தி பூச்சியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.

கிழக்கு சீனாவின் ஜியாங்சு  மாகாணத்தை சேர்ந்த லீ என்ற இளைஞருக்கு அடிக்கடி காது வலி ஏற்பட்டுள்ளது. இதனால் யாங்க்சோவில் உள்ள மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் காட்டியுள்ளார். கடந்த சில நாட்களாகவே காதின் உட்புறத்தில் தாங்க முடியாத வலி ஏற்பட்டதாகவும், ஏதோ ஊர்ந்து செல்வது போல் இருப்பது என்றும் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ears

உடனே மருத்துவர்கள் மைக்ரோஸ்கோப் கருவியின் மூலம் லீயின் காதுகளை சோதனை செய்தனர். அதில் சிலந்தி கூடுக் கட்டிருப்பது தெரியவந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள், சிலந்தி உயிருடன் இருப்பதாகவும், அது காதுக்குள் கூடுகட்டி வருவதாகவும் லீயிடம் தெரிவித்தனர். உடனே உரிய சிகிச்சை அளித்து சிலந்தியை லீயின் காதுகளிலிருந்து வெளியேற்றினர்.