இளம் பெண்ணை படமெடுத்தார் ,பிளாக் மெயில் செய்தார் -உடலும் ,பணமும் கேட்ட தில்லாலங்கடி டிஸ்ட்ரிபியூட்டர் ..

 

இளம் பெண்ணை படமெடுத்தார் ,பிளாக் மெயில் செய்தார் -உடலும் ,பணமும் கேட்ட தில்லாலங்கடி டிஸ்ட்ரிபியூட்டர் ..

ரூபேஷ் என்ற 39 வயதான கன்னட பட டிஸ்ட்ரிபியூட்டர் பெங்களூருவின் யஷ்வந்த்பூரில் வசிக்கிறார். இவர் ஆஸ்த்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிப்ரவரி 1ன் தேதி பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண்ணை சந்தித்தார். அந்த பெண்ணுக்கு கல்யாணமாகி, குழந்தைகள் உள்ளனர். ருபேஷுக்கும் கல்யாணமாகி குழந்தைகள் உள்ளனர், இருவரும் அங்கு  அடிக்கடி சந்தித்து பேசியுள்ளனர். ஒரு நாள் ரூபேஷ் அந்த பெண்ணை ஹூக்கா அடிக்க சொன்னார், அவரும் அடித்து கொஞ்சம் போதையானதும் இவர் அந்த பெண்ணிடம் நெருக்கமாக இருப்பது போல பல போட்டோக்கள் எடுத்துள்ளார். பிறகு ரூபேஷ் அந்த போட்டோக்களை அந்த பெண்ணிடம் காண்பித்து உறவுகொள்ள வற்புறுத்தியுள்ளார். மேலும் 6 லட்சம் பணமும் கேட்டார்.

பணமும் உடலையும் தர மறுத்தால் இந்த போட்டோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளார். பிப்ரவரி 22 ந்தேதி பெங்களூரு நந்தினி நகருக்கு அந்த பெண் வந்ததை கேள்விப்பட்டு அவரும் அந்த பெண்ணை அங்கு தேடி வந்து ப்ளாக் மெயில் பண்ணியுள்ளார். இதனால் மனம் வெறுத்த அந்த பெண் போலீசில் அவர் மீது புகாரளித்துள்ளார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .