இளம்பெண் திருமணத்தை நிறுத்த திட்டமிட்டு தந்தையை கொன்ற இளைஞர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!?

 

இளம்பெண் திருமணத்தை நிறுத்த திட்டமிட்டு தந்தையை கொன்ற இளைஞர்: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!?

சிறுமி ஒருவரின் திருமணத்தை தடுத்தி நிறுத்திய ஆட்டோ டிரைவர்  ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அயனாவரம்:  சிறுமி ஒருவரின் திருமணத்தை தடுத்தி நிறுத்திய ஆட்டோ டிரைவர்  ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

auto

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ஜெபசீலன். இவருக்கு பிரிசிலா என்ற மனைவியும் இவர்களுக்கு ஷீபாராணி என்ற மகளும், 17 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஷீபாராணிக்கு கடந்த 10-ந் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மீஞ்சூரில் நேற்று நடக்கவிருந்த மகள் திருமண வரவேற்பிற்கு அயனாவரத்திலிருந்து ஜெபசீலனும்,பிரிசிலாவும் செல்ல கிளம்பினர். அப்போது செல்லும் வழியில் அவர்களை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டியது, இதில் ஜெபசீலன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பிரிசிலா  ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

murder

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஜெபசீலன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த கொடூர தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெபசீலன் வீட்டின் அருகே வசித்து வந்த 17 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருடன் திருமண ஏற்பாடு நடந்துள்ளது.குழந்தை திருமணம் என்பதால் அதை ஜெபசீலன் தடுத்து நிறுத்தியதாகத் தெரிகிறது.  இதனால் ஜெபசீலன் மீது ஆத்திரத்திலிருந்த  வினோத், ஜெபசீலனின் மகளின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற நோக்கில் தமது நண்பர்களுடன் இணைந்து அவரை கொலை செய்துள்ளது  தெரியவந்துள்ளது. 

crime

கொலை குற்றவாளி  வினோத் மற்றும் அவரது நண்பர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.