இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவன்…. சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு!

 

இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய சிறுவன்…. சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு!

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் இளம் பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்ததுடன், அதை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் இளம் பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்ததுடன், அதை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய சிறுவன் ஒருவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவையாறு பகுதியில் 25 வயதான இளம் பெண் ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர் வீட்டுக்கு அருகே 17 வயது சிறுவன் வசித்துவந்துள்ளான். நீண்ட காலமாக அவர்கள் அந்த பகுதியில் வசித்து வருவதால், அக்கா – தம்பி போல பழகிவந்துள்ளனர். இதனால், சகஜமாக அவன் அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்து சென்றுள்ளான்.

women

சம்பவத்தன்று வீட்டில் அந்த பெண் குளித்துக்கொண்டிருக்கும்போது, யாரோ தன்னை நோட்டமிடுவது போன்று அவருக்கு தோன்றியுள்ளது. அப்போது சுற்றும்முற்றும் பார்த்தபோது தம்பி போன்று பழகிய சிறுவன் கையில் மொபைல் போனுடன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவனிடம் வந்து, இங்கே என்ன செய்கிறாய், கையில் மொபைல் வைத்து என்ன செய்கிறாய் என்று கேட்டுள்ளார். அதற்கு அவன், குளியலை வீடியோ எடுத்தேன், என் விருப்பத்திற்கு இணங்காவிட்டால் அதை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டியுள்ளான்.
இதையடுத்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த சிறுவனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மொபைலைக் கைப்பற்றி ஆய்வு செய்தபோது, அதில் குளியல் வீடியோ இருந்துள்ளது. இதையடுத்து சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுவன் மைனர் என்பதால் சிறையில் அடைக்காமல் அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.