இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: பகீர் வாக்குமூலம்!?

 

இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர்: பகீர் வாக்குமூலம்!?

மேல்பகுதி உடலும், முக்கிய உறுப்புகளும் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இளைஞர்  கோபிநாத் காரா போலீசில் சரணடைந்துள்ளார்.

ஒடிசா: ஒடிசாவில் காதலை ஏற்க மறுத்த  பெண்ணை  இளைஞர் ஒருவர் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஒடிசாவைச் சேர்ந்தவர் கோபிநாத் காரா என்ற இளைஞர் அவர் வசித்த பகுதியில் உள்ள இளம்பெண் வீட்டிற்குக் கடந்த 31 ஆம்  தேதி சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த 17 வயதான அந்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி விட்டு அங்கிருந்து  தப்பித்து ஓடியுள்ளார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அப்பெண்ணை எம்.கே.சி.ஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அப்பெண் கட்டாக்கிலுள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

fire

இந்நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்த அந்த இளம்பெண், நேற்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் மேல்பகுதி உடலும், முக்கிய உறுப்புகளும் கடுமையான தீக்காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவாக இருந்த இளைஞர்  கோபிநாத் காரா போலீசில் சரணடைந்துள்ளார்.

suiicde

 தான் அந்த பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், பலமுறை காதலைச் சொல்லியும் அப்பெண் ஏற்க மறுத்ததால், ஆத்திரத்தில் தீயிட்டுக் கொளுத்தியதாகவும்   கோபிநாத் காரா வாக்குமூலம்  அளித்துள்ளார்.