இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மகன்: வீடியோ எடுத்த மிரட்டிய தாய்!

 

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த மகன்: வீடியோ எடுத்த மிரட்டிய தாய்!

பெண்ணுக்கு உணவு பரிமாறி, உபசரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்தப் பண்டங்களில் போதை மருந்து கலந்திருந்தது அப்பெண்ணுக்குத் தெரியவில்லை

சத்தீஸ்கர் : இளம்பெண்ணை மகன் பாலியல் பலாத்காரம் செய்வதை அவரது தாயே வீடியோ எடுத்த கொடூரம் சத்தீஸ்கரில் நடந்துள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீசிய காதல் வலையில் 19 வயதான இளம்பெண் ஒருவர் சிக்கியுள்ளார். இதையடுத்து ஒருநாள் தனது காதலியை அந்த இளைஞர் வீட்டிற்கு அழைக்க, காதலனை நம்பி அப்பெண்ணும் சென்றுள்ளார். வீட்டிலிருந்த அந்த இளைஞரின் தாய், அந்த பெண்ணுக்கு உணவு பரிமாறி, உபசரித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்தப் பண்டங்களில் போதை மருந்து கலந்திருந்தது அப்பெண்ணுக்குத் தெரியவில்லை. சில நிமிடங்களில் அந்த இளம்பெண் மயக்கநிலையை அடைந்ததும், அந்த இளைஞர் அந்த பெண்ணை  படுக்கையறைக்குத் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அவரது தாயே வீடியோ எடுத்துள்ளார். 

harassment

இதையடுத்து அந்த இளைஞரின் சகோதரியும், அவரது கணவனும் சேர்ந்து, அந்த வீடியோவை காட்டி  அப்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அந்த பெண் தனது தந்தை வைத்திருந்த ரூ.4 லட்சத்தை கொண்டு வந்து அவர்களிடம் கொடுத்துள்ளார். ஆனால்  தொடர்ந்து அவர்கள் அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளனர்.வீட்டிலிருந்த பணம் காணாமல் போனது குறித்து பெண்ணிடம் அவரது தந்தை கேட்க, அப்போது தான் அந்த பெண் அவரிடம் கதறி அழுதபடி உண்மையைக் கூறியுள்ளார். 

harassment

மகள் கூறியது கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த இளைஞரின் குடும்பத்தைக் கைது செய்து விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.