“இளம்பெண்ணை கடத்தி காரிலேயே கட்டாய திருமணம்” ரோமியோவுக்கு உதவி செய்த மூவரை தட்டிதூக்கிய போலீஸ் – வைரல் வீடியோ!

 

“இளம்பெண்ணை கடத்தி காரிலேயே கட்டாய திருமணம்” ரோமியோவுக்கு உதவி செய்த மூவரை தட்டிதூக்கிய போலீஸ் – வைரல் வீடியோ!

அவர்களை  ராமாநகாராவில் உள்ள மனுகுமார்  உறவினர் வீட்டில்  வைத்து போலீசார் கைது செய்தனர்.

கர்நாடகா மாநிலம் ஹசான் மாவட்டத்திலுள்ள அர்சிகேரே என்ற கிராமத்தை சேர்ந்தவர்  மனுகுமார். இவர் அதேபகுதியை சேர்ந்த  உறவினர் பெண்ணை ஒருதலையாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால்  இவரது காதலை அப்பெண் ஏற்க மறுத்துள்ளார். 

ttn

இந்நிலையில் கடந்த சில  தினங்களுக்கு முன்பு டெய்லர் கடையில்  வேலை செய்யும் அப்பெண் பணிமுடிந்து வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அப்பெண்ணை மனுகுமார் தனது நண்பர்கள் உதவியுடன் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பெண்ணை காரில் கடத்தி  சென்றதும் காரில் வைத்தே அப்பெண்ணிற்கு கட்டாயத் தாலிகட்டியதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை  ராமாநகாராவில் உள்ள மனுகுமார்  உறவினர் வீட்டில்  வைத்து போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து மனுகுமார் அளித்த வாக்குமூலத்தில், ‘பணிமுடிந்து பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பெண்ணை காரில் கடத்தியதோடு, காரில் வைத்தே தாலி கட்டினேன். அவள் கத்துவது தெரியாமல் இருக்க பாட்டை அதிக சத்தமாக வைத்தோம். கட்டாய தாலிகட்டிய திருமண வீடியோ காட்சியை என்னுடைய பேஸ்புக்கில் வெளியிட்டேன் . அதனால் தான் மாட்டிக்கொண்டேன்’ என்று கூறியுள்ளார். இதனிடையே பெண்ணுக்கு நடந்த கொடுமையையறிந்த அப்பெண்ணின் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.