இளம்பெண்ணைக் கடத்தி 2 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை.. கொடூரனுக்கு போலீசார் வலைவீச்சு!

 

இளம்பெண்ணைக் கடத்தி 2 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை.. கொடூரனுக்கு போலீசார் வலைவீச்சு!

அந்த பெண் செல்வதை அறிந்து கொண்டு நபர் ஒருவர் , அந்த பெண்ணை அங்கிருந்து கடத்தி சென்று தன் வீட்டில் அடைத்து வைத்து, 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் இரண்டு நாட்களுக்கு முன்னர் இயற்கை உபாதைக்காக வெளியே சென்றுள்ளார். அந்த பெண்ணின் வயது 20. அந்த பெண் செல்வதை அறிந்து கொண்டு நபர் ஒருவர் , அந்த பெண்ணை அங்கிருந்து கடத்தி சென்று தன் வீட்டில் அடைத்து வைத்து, 2 நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த வீடு ஊரிலிருந்து சற்று தொலைவில் இருந்ததால், அந்த பெண் கதறும் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது.

 

rape

அந்த பெண்ணின் பெற்றோர் தனது மகளைக் காணவில்லை என்று அனைத்து இடத்திலும் தேடி பார்த்துவிட்டு, அப்பகுதி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். அவர்கள் புகார் அளித்து விட்டுத் திரும்பும் போது, அங்கு வந்த நபர் ஒருவர் அவர்களிடம் “என் வீட்டில் தான் உங்கள் மகள் இருக்கிறாள்” என்று கூறிவிட்டுத் தப்பியோடியுள்ளார். இதனால், பதற்றமடைந்த பெற்றோர் போலீசாரின் உதவியுடன் அந்த வீட்டிற்குச் சென்று மயக்க நிலையில் கிடந்த பெண்ணை மீட்டுள்ளனர். பிறகு அந்த பெண் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாகப் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், அந்த கொடூரனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.