இளம்பெண்ணின் விரல்களை வெட்டிய நபர் கைது!

 

இளம்பெண்ணின் விரல்களை வெட்டிய நபர் கைது!

அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில்  ரயன் அகர்வாலை போலீசார் எச்சரித்து விட்டு சென்றனர். 

மும்பையைச் சேர்ந்தவர் உடால்ப் மேவர். இவரது 27 வயதான மகள் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு  ரயன் அகர்வால் என்பவர் வீடு ஏற்பாடு செய்து கொடுத்து அந்த பெண்ணிற்கு பாதுகாவலராக இருந்துவருகிறார்.

இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி ரயன் அகர்வால் மீது அந்த இளம்பெண் வேப்பேரி போலீசில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில்  ரயன் அகர்வாலை போலீசார் எச்சரித்து விட்டு சென்றனர். 

tt

இதையடுத்து ஆத்திரமடைந்த ரயன் அகர்வால் அன்று இரவு 2 மணியளவில் அந்த பெண் தங்கியிருக்கும் வீட்டிற்குச் சென்று, ஏன் புகார் கொடுத்தாய் என்று அடித்து உதைத்ததுடன் அப்பெண்ணின் விரல்களை வெட்டியுள்ளார். 

இது குறித்து அந்தப் பெண் மும்பையில் உள்ள தனது தந்தையிடம் கூற,  அவரோ பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் தலைவர் ரவியின் எண்ணை கண்டுபிடித்து புகார் செய்துள்ளார்.

tt

பின்னர், காவல் துறை கூடுதல் தலைவர் ரவியின் உத்தரவின் பேரில் வேப்பேரி போலீசார், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரயன் அகர்வாலை கைது செய்தனர். மேலும், அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.