இளம்பெண்ணின் நூதன திருட்டு!  8 ஜீன்ஸ் பேண்ட்   அணிந்து வெளியேறினார்!

 

இளம்பெண்ணின் நூதன திருட்டு!  8 ஜீன்ஸ் பேண்ட்   அணிந்து வெளியேறினார்!

சாதாரணமாக ஒரு ஜீன்ஸ் பேண்ட்  அணிந்தாலே, ஆண்களோ பெண்களோ வீட்டிற்குள் நுழைந்தவுன் உடை மாற்றுவதற்கு சென்று விடுவார்கள். வெளியே ஸ்டைலாகவும், அணிவதற்கு வசதியாக இருந்தாலும், முரட்டுத் துணியாலான ஜீன்ஸ் பேண்ட்கள் நீண்ட நேரம் தொடர்ச்சியாக அணிவதற்கு உகந்தவை அல்ல என்கின்றன ஆய்வுகள்.

சாதாரணமாக ஒரு ஜீன்ஸ் பேண்ட்  அணிந்தாலே, ஆண்களோ பெண்களோ வீட்டிற்குள் நுழைந்தவுன் உடை மாற்றுவதற்கு சென்று விடுவார்கள். வெளியே ஸ்டைலாகவும், அணிவதற்கு வசதியாக இருந்தாலும், முரட்டுத் துணியாலான ஜீன்ஸ் பேண்ட்கள் நீண்ட நேரம் தொடர்ச்சியாக அணிவதற்கு உகந்தவை அல்ல என்கின்றன ஆய்வுகள். இந்நிலையில், பிரபலமான துணிக்கடைக்குள் நுழைந்த பெண் ஒருவர், அங்கிருக்கும் ஜீன்ஸ் பேண்ட்களை நோட்டமிட்டு தனக்குப் பிடித்த பேண்ட்களை எடுத்துக் கொள்கிறார்.

women

அதன் பின்னர் துணி மாற்றுவதற்காக ட்ரையல் ரூமிற்குள் சென்ற அந்த இளம் பெண், ஒரு ஜீன்ஸ் பேண்ட்டின் மேல் இன்னொன்றாக தொடர்ச்சியாக எட்டு ஜீன்ஸ் பேண்ட்களை அணிந்துள்ளார். அதன் பிறகு எந்த பேண்டுகளுக்கும் பில் எதுவும் போடாமல், அப்படியே 8 பேண்ட்டுகளையும் அணிந்தவாறு கடையில் இருந்து வெளியேற முயன்ற போது, சந்தேகமடைந்த கடையின் காவலாளி அந்த இளம் பெண்ணை தடுத்து நிறுத்தி சோதனை செய்திருக்கிறார். 

jeans

இதனையடுத்து குளியலறைக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று சோதனையிட்டதில், அந்த இளம் பெண் தான் அணிந்திருக்கும் எட்டு ஜீன்ஸ் பேன்ட்களையும், ஒன்றன் பின் ஒன்றாக கழற்றுகிறார். ஒவ்வொரு பேண்டாக கழற்றும் போதும், கடையின் காவலாளி அதை வீடியோவாக பதிவு செய்து பேண்ட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.